கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட ஹோட்டல் ஊழியர் மரணம்
காலியில் கொரோனா தடுப்பூசி ஏற்றிய ஹோட்டல் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஹோட்டல் ஊழியரின் இரத்த தட்டுகள் வேகமாக குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்வதற்காக இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்திய காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் ஊழியர் கடந்த இரண்டு வாரகளுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி பெற்றுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெற்றுக் கொண்ட நாள் முதல் குறித்த ஹோட்டல் ஊழியருக்கு காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி மற்றும் இரத்த தட்டுகள் குறைவடைந்தமை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri