கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட ஹோட்டல் ஊழியர் மரணம்
காலியில் கொரோனா தடுப்பூசி ஏற்றிய ஹோட்டல் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஹோட்டல் ஊழியரின் இரத்த தட்டுகள் வேகமாக குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்வதற்காக இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்திய காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் ஊழியர் கடந்த இரண்டு வாரகளுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி பெற்றுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெற்றுக் கொண்ட நாள் முதல் குறித்த ஹோட்டல் ஊழியருக்கு காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி மற்றும் இரத்த தட்டுகள் குறைவடைந்தமை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan