மருத்துவமனைகளில் சிசேரியன் தையலுக்கு தேவையான பொருட்களுக்கும் தட்டுப்பாடு
நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சில மருத்துவமனைகளில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தேவையான தையல் நூல் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த கூட்டமைப்பின் செயலாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மருந்துகளை உட்பட பலவற்றை மருந்தகங்களில் கொள்வனவு செய்து வருமாறு நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் அறிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயாளிகள் மற்றும் அன்பளிப்பாளர்களின் உதவிகளுடனேயே தற்போது நாட்டில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கும் சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜயருவான் பண்டார கூறியுள்ளார்.