வைத்தியசாலை கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எச்சரிக்கை
நாட்டின் ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பும் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மருத்துவர்கள் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறினால் அது ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பினையும் பாதிக்கும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த இரண்டாண்டு காலப் பகுதியில் சுமார் இரண்டாயிரம் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மருத்துவர்களை தக்க வைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் சம்பளம், கொடுப்பனவு, மேலதிக வேலை நேரம் போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியிடுவதாக அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட் சுற்று நிருபத்தை வெளியிடப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுற்று நிருபம் வெளியிடுவதற்கு காலம் தாழ்த்தப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
