வைத்தியசாலையின் கடைநிலை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் கடைநிலை பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை நாளையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகவீன விடுமுறையை அறிவித்தே அவர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.
கூட்டு சுகாதார சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரர் இந்த தொழிற்சங்க நடவடிக்கை, வைத்தியசாலைகளில் உள்ள கடைநிலை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிட்டார்.
12 கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.