முன்னணி அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த ஒன்பது மாதங்களில் முன்னணி அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநோயாளர் பிரிவு நோயாளர்கள்
அதேநேரம் கடந்த ஒன்பது மாதங்களில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 42 வீதத்தால் அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற நோயாளிகளின் ஆர்வம் குறைந்து வருவதே இந்த உயர்வுக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |