தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களுக்கு கௌரவிப்பு
தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் - சுதுமலையில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து, மங்கல இசை வாத்தியங்கள் முழங்க மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
கௌரவிக்கப்பட்ட வீரர்கள்
அதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்று, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்வில் வரவேற்பு நடனம் இடம்பெற்றதோடு விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, இந்நிகழ்வில் தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு சிறப்பு விருந்தினராக
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பசிந்து குணவர்தன, யாழ்ப்பாண
இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam
