மிகமுக்கிய நான்கு நாடுகளுக்கு ஹொங்கொங் விதித்துள்ள தடை
அங்கோலா, எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் ஷம்பியா ஆகிய நான்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹொங்கொங் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே இதனைத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவுஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் மற்றும் 6 ஐரோப்பிய நாடுகளுக்குக் கடந்த 21 நாட்களில் பிரவேசித்தவர்களுக்கும் தடை விதிப்பதற்கு ஹொங்கொங் திட்டமிடுவதாகச் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் 'ஒமிக்ரொன்' கோவிட் வைரஸ் திரிபு தொடர்பில் நேற்று(29) எச்சரிக்கை விட்டுள்ள நிலையில் உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகின்றன.