மகளின் அழகு நிலைய திறப்பு விழாவில் தாய்க்கு நேர்ந்த சோகம்
மகளின் அழகு நிலைய திறப்பு விழாவிற்கு சென்ற தாய் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பிலியந்தலை பகுதியினை சேர்ந்த (78) வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம நகரில் உள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தனது மகள் அழகு நிலையம் ஒன்றை திறக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில், முதலாவது மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்குச் செல்வதற்காக கட்டப்பட்ட படிக்கட்டுகளில் இறங்கpய போது தவறி விழுந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம்
இதனையடுத்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்பின்னர் ஹோமாகம பிரதம மரண விசாரணை அதிகாரி சிந்தக உதய குமாரவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், உயரத்தில் இருந்து விழுந்ததில் மூளை மற்றும் மண்டை ஓட்டில் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளே மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan