வாகன விபத்தில் சிக்கி மூன்றரை வயது குழந்தை பலி
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் புத்தாண்டு விடுமுறை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஹோமாகம, கொடகம சந்திக்கு அருகில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்தில் மதுலாவ பிரதேசத்தை சேர்ந்த அபிரு கேசர என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி இன்று (18ம் திகதி) அதிகாலை 1.30 மணியளவில் முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி கவிழ்ந்துள்ளது.
மீகொட பொலிஸார் விசாரணை
இதன்போது விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த குழந்தை தனது பெற்றோருடன் கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி சாரதி போதையில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.