வியாபாரத்தில் பதுக்கல் செய்பவர்கள் பாவிகள்!
வியாபாரத்தில் பதுக்கல் செய்பவர்கள் பாவிகள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் பிரகாரம் ஹராம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலாமா சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
தற்போது முழு உலகும் குறிப்பாக எமது தாய்நாடும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதோடு, பொருட்களின் விலைவாசியும் அதிகரித்து மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, வியாபாரிகள் இக்கட்டான இந்நிலையில் மக்களுக்கு நெருக்கடி கொடுக்காது அவர்களின் நலன்கருதி அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை பதுக்கி வைக்காது நியாய விலையில் விற்பனை செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
பொதுவாக வியாபாரத்தில் இலாபமீட்டிக் கொள்வது மார்க்கத்தில் அனுமிக்கப்பட்ட ஒன்றாகும். என்றாலும், அந்த இலாபம் பொருத்தமான அளவில் இருக்க வேண்டும் என்பதுடன் எல்லை கடந்து மக்களுக்கு சிரமம் உண்டாகும் முறையில் இருப்பது கூடாது.
ஏனெனில், மக்களின் மனவிருப்பம் இன்றி கிடைக்கும் பணம் சுத்தமான பணமாக இருக்கமாட்டாது. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை அவர்கள் வேறு வழியில்லாமல் கூடுதலான பணத்தைக் கொடுத்து பூரண மனவிருப்பம் இன்றியே வாங்குகின்றனர். அவ்வாறு ஒருவரின் மனவிருப்பம் இன்றி அவரது பணத்தை எடுத்துக்கொள்வது ஹலாலாக அமைய மாட்டாது.
அண்மைய நாட்களாக சீனி, அரிசி போன்ற உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு அவை மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 1 மணி நேரம் முன்

ட்ரம்பால் பற்றியெரியப் போகும் மத்திய கிழக்கு.... ஈரானின் பதிலடிக்கு தயாராகும் அமெரிக்க இராணுவம் News Lankasri
