சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் மகாவித்தியாலயம் மற்றுமோர் வரலாற்று சாதனை
நேற்றைய தினம் வெளியாகிய 2020 ம் ஆண்டிற்குரிய க.பொ.த. உயர் தரப்பரீட்சையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் மகா வித்தியாலய மாணவன் எஸ் . அனோஜன் வரலாற்றுச்சாதனை படைத்துள்ளார்.
தரம் ஒன்று தொடக்கம் உயர்தரம் வரை இப்பாடசாலையிலேயே கல்வி கற்று இப்பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 3A சித்தியைப் பெற்ற மாணவன் என்ற பெருமையை சகாயதேவன் அனோஜன் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுப்போக்குவரத்து வசதிகளுடன் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளற்ற அதிகஷ்ட பிரதேசமான சொறிக்கல்முனையில் இயங்குகின்ற ஒரேயொரு 1 C தரப் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி சிறியபுஸ்பம் சாதனை மாணவன் எஸ். அனோஜனைப் பாராட்டுவதுடன், இம்மாணவனுக்குக் கற்பித்த ஆசிரியர் குழாத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட்- 19 தாக்கத்தின் மத்தியிலும் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தரின் தொடர் கண்காணிப்பிலும் , ஊக்குவிப்பிலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையிலும், கோட்டப் பணிப்பாளரின் வழி நடத்துதலிலும் இம்மாணவர்கள் தமது பரீட்சையை எதிர்கொண்டனர்.
இம்மாணவர்களின் வளர்ச்சிப் பாதையிலே பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் தங்கள் பங்களிப்பை வழங்கி இருந்ததுடன், மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிலே அதிகம் கவனம் எடுப்பதை நாம் உணர்கிறோம்.
இம்மாணவர்களும், ஏனைய மாணவர்களும் தம் வாழ்வில் மேலும் வளர்ச்சிப்பாதையில் சென்றிட வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பாடசாலை மாணவர்களான ச. அனோஜன் , J.S
கிறிசாந்தி , S . துசாந்தினி, P.ஜதுர்ஷன், கிறிஸ்ரி சுபராஷ் சத்தியா, ஜோன்சன்
துசானி ஆகியோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவார்கள் என
எதிர்பார்க்கப்படுகின்றது.