செருப்பால் அடித்து துரத்தப்பட்ட அருண் சித்தார்த்.. விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்துக்கு கடும் கண்டனம்
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் வந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பற்றி தைரியமாக பேசிப் பாருங்கள் என அருண் சித்தார்த்தை நோக்கி யாழ்ப்பாணம் காரைநகரை சேர்ந்த தம்பி தம்பிராசா சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அருண் சித்தார்த், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் வந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பற்றி தைரியமாக பேசிப் பாருங்கள்.
ஹிருணிக்காவால் பேருந்து நிலையத்தில் செருப்பால் அடித்து துரத்தப்பட்ட அவருக்கு ஹிருணிக்கா மீது பொலிஸில் ஒரு முறைப்பாடு கூட முன்வைக்க முடியவில்லை. இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பற்றி அவர் விமர்சிக்கின்றார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்தில் பிஞ்சுக்குழந்தைகளின் உடலங்கள் தோண்டப்பட்டு கொண்டிருக்கின்றன.
இதை முற்றுமுழுதாக இலங்கை அரச படைகள் தான் மேற்கொண்டிருக்கின்றன. எனவே, ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்றும் வகையில் இவ்விடயத்தில் செயற்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |