ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரும் இஸ்ரேலின் தாக்குதலில் பலி
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு அடுத்த தலைவாக கருதப்படும் மதகுருவான ஹசேம் சஃபிதீன் தாங்கள் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹசேம் சஃபிதீன் என்ற இந்த மதகுரு உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேலுடன் போராடும் ஹிஸ்புல்லா, சஃபிதீனின் மரணத்தை இதுவரையில், உறுதிப்படுத்தவில்லை.
ஹிஸ்புல்லா அமைப்பு
இதன்படி ஹிஸ்புல்லா அமைப்பின் முன்னைய தலைவரான நஸ்ரல்லா செப்டம்பர் 27 அன்று பெய்ரூட்டில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

மேலும், ஒக்டோபர் 4ஆம் திகதியன்று நகரின் விமான நிலையத்திற்கு அருகே வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, தாம், சஃபிதீனுடனான தொடர்பை இழந்துவிட்டதாக ஹிஸ்புல்லா அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 14 நிமிடங்கள் முன்
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri