ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுட்டுக்கொலை
ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவமானது கிழக்கு லெபனானில் (Lebanon) - பெக்கா பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள அவரின் வீட்டின் முன் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஷேக் ஹமாதி மீது ஆறு குண்டுகள் பாய்ந்ததாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுட்டுக்கொலை
இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷேக் முகமது அலி ஹமாதி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார்.
இவர் கடந்த 1985ஆம் ஆண்டு 153 பயணிகளுடன் உரோம் நகரில் இருந்து ஏதென்ஸ் நோக்கிச் சென்ற விமானத்தை கடத்தி, அதில் ஒரு அமெரிக்கரை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகின்றார்.
இந்நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri