மட்டக்களப்பு - அம்பாறை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (09.07.2026) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே, இன்றையதினம் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் அடிக்கடி போதுமான அளவு நீரைப் பருகுமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அதேநேரம், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், வெயிலில் அதிக சிரமத்தைக் கொடுக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில், வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது மென்மையான நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது போன்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வெப்பநிலை அதிகரிப்பின் போது உடல் நலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அசௌகரியங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam