யாழில் கவனீர்ப்பு பேரணியில் இறங்கிய சுகாதார தொழிற் சங்கத்தினர்!(Video)
புதிய இணைப்பு
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பகுதியிலிருந்து ஆரம்பித்த பேரணி ஆஸ்பத்திரி வீதியூடாக பலாலி வீதி மற்றும் ஸ்டான்லி வீதிக்குச் சென்று அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுர வீதி ஊடாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முதலாம் இணைப்பு
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய, மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகிறது.
வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் சுகாதாரத் துறையை அழிக்காதே, சுகாதார நிர்வாக சேவையை ஆரம்பி,விசேட கொடுப்பனவை உயர்த்து, பொது மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடு, பதவி உயர்வு முரண்பாட்டைத் தீர்த்து வை, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கு, றணுக்கின் அறிக்கையை நடைமுறைப்படுத்து போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.
போராட்டம் காரணமாக யாழ் நகரப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதனைச் சீர் செய்வதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.





Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
