வாகனம் வாங்கும் நடவடிக்கை நிறுத்தப்படும்! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்த இத்தகைய முடிவு எடுக்கப்பட வேண்டும்.
இலங்கைக்கு வடகிழக்கில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சிவப்பு எச்சரிக்கையுடன் அவசர அறிவுறுத்தல்
எரிபொருள் இறக்குமதிக்கான செலவு
குறிப்பாக, மே மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் 550 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட வேண்டியிருந்தது.

அதன் விளைவாக, எரிபொருள் நுகர்வு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். எரிபொருளுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக தேவையற்ற செலவினங்களைக் குறைப்பது அவசியம்.
அதன்படி, வரும் காலத்தில் அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam