சுகாதார பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கா விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! கலைச்செல்வி எச்சரிக்கை
சுகாதாரம் தொடர்பான வேலைத்திட்டங்கள் ஹட்டன் டிக்கோயா நகரசபையினால் முன்னெடுக்க மறுத்தால் அதற்கான சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஹட்டன் டிக்கோயா பிரதேச குழுவின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
ஹட்டன் டிக்கோயா பிரதேச குழு கூட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் போதே கிருஷ்ணன் கலைச்செல்வி இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் குறிப்பிடுகையில்,
சுகாதாரம் தொடர்பான விடயங்கள்
சுகாதாரம் தொடர்பான விடயங்களை செயல்படுத்த முடியாவிட்டால் சட்ட நடவடிக்கையினை எடுக்க முடியும். அதற்காக பொலிஸார் உள்ளனர். நீதிமன்றம் உள்ளது.
ஒவ்வொரு பிரதேச குழு கூட்டத்திற்கும் ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் செயலாளர் வருவதில்லை.
அங்குள்ள உத்தியோகத்தர் மாத்திரம் வருகிறார். அவ்வாறு சமுகம் தராமல் இருந்தால் அங்குள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு வழங்க முடியும்?
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலைதிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அரச உத்தியோகத்தர்களும் நாமும் இணைந்து இந்த நாட்டு மக்களுக்காக வேலைசெய்ய வேண்டும்” என்றார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri
