மட்டக்களப்பு கதவடைப்பு போராட்டத்தில் மக்களிடம் வசமாகச் சிக்கிய மாநகர முதல்வர்
தமிழரசு கட்சி உறுப்பினரான மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், காலையில் திறக்கப்பட்ட சில கடைகளை மூடுமாறு கூறிய நிலையில் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், அங்கிருந்த தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கடைகளை திறக்குமாறு குறிப்பிட்ட நிலையில், அவர்களுக்கும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடையை மூடுங்கள்..
இந்நிலையில் கடைகளை மூடுமாறு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
வடக்கு - கிழக்கு தழுவிய கதவடைப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பில் பெருமளவு ஆதரவு வழங்கப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரை தவிர்த்த ஏனைய பிரதேசங்களில் காலையில் வழமை போன்று கடைகள் திறக்கப்பட்டு இயங்கியுள்ளன.
அதேவேளை, மட்டக்களப்பு நகரில் காலை ஒரு சில கடைகளை தவிர ஏனைய கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், மாநகர சபை எல்லைக்குட்பட்ட சந்தைக்கட்டிடம் பூட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
