1990 சுவசெரிய சேவைக்கு இந்தியா வழங்கும் அம்பியூலன்ஸ்: ஹர்ஷ டி சில்வா விளக்கம்
1990 சுவசெரிய சேவைக்கு மேலும் 150 அம்பியூலன்ஸ் வாகனங்கள் இந்தியாவில் இருந்து கிடைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
1990 சுவசெரிய சேவை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திரசேகரனுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு மேலும் 150 அம்பியூலன்ஸ்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாற்று பெயரிடுதல்
1990 சுவசெரிய சேவையின் இலட்சினை மற்றும் வண்ணங்களை மாற்ற அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கின்றது.1990 சுவசெரிய, நன்கு அங்கீகரிக்கப்பட்ட நாமம். அதை மாற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
இந்த சேவை எனக்கு சொந்தமானது என்று அரசாங்கம் நினைப்பது போல் தெரிகிறது. இது ஒரு அபத்தமான யோசனை. இதனால், அவர்கள் பெயரையும் வண்ணங்களையும் மாற்ற விரும்புகின்றார்கள்.
இந்த நாமத்தை உருவாக்குவதற்கு அதிக முயற்சி மற்றும் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்று பெயரிடுதலுக்கு அதிக நேரம், திட்டமிடல் மற்றும் நிதி தேவைப்படும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு News Lankasri
