ஹர்ச டி சில்வா சி.ஐ.டிக்கு வாக்குமூலம் வழங்க வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
தனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவை (Harsha De Silva) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்ச டி சில்வாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) நேற்று (07.06.2024) பணிப்புரை விடுத்துள்ளார்.
புதியவிசா வழங்கும் முறை
நாடாளுமன்றத்தில் ஹர்ச டி சில்வா புதிய விசா (VFS) வழங்கும் முறை தொடர்பான சர்ச்சையின் விசாரணையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, இது தொடர்பில் சி.ஐ.டிக்கு அவர் வாக்குமூலம் வழங்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam