ஐக்கிய மக்கள் சக்தி தரப்பால் அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

Parliament of Sri Lanka United National Party Harsha de Silva
By Sajithra Dec 06, 2024 07:20 PM GMT
Report

சர்வதேச பிணை முறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லை. முடிந்தால் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள் என்று சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

"ஐக்கிய நாடுகள் சபையின் 2019ஆம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் நான்கில் ஒரு பெண் தவறான நடத்தைக்கு உட்படுத்தல் மற்றும் உடலியல் ரீதியிலான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

முல்லைத்தீவு - கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியம் 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு ஒரு நாள் அல்ல எந்நாளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். எமது நண்பர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகவும், அத்துடன் எம்முடன் இணக்கமாக செயற்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆகவே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐக்கிய மக்கள் சக்தி தரப்பால் அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் | Harsga De Silva Challenges The Gov

2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்கு இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் ' சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து விலகினால் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும் ' என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதுவே உண்மை. இதனையே நாங்களும் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம். சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து செயற்பட முடியாது. இருப்பினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருசில நிபந்தனைகள் மீள்பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினோம். தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு தற்போது நாடாளுமன்றத்துக்கு பிறிதொன்றை சமர்ப்பித்துள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் மேற்குலகுக்கு ரஷ்யா சொன்ன செய்தி

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் மேற்குலகுக்கு ரஷ்யா சொன்ன செய்தி

தேசிய கடன் மறுசீரமைப்பு 

2025 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் கடன் சேவை 4000 பில்லியனாக எதிர்பார்க்கப்படுவதுடன், குறித்த நான்கு மாத காலப்பகுதிகளுக்கு 1600 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 4800 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி தரப்பால் அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் | Harsga De Silva Challenges The Gov

தேசிய கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதிய பயனாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். இவர்களின் நலன் கருதி அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம்.

இருப்பினும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே அரசியல் மேடையில் குறிப்பிட்டது ஒன்று, செய்வது பிறிதொன்று, சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஆகவே, இனி ஏதும் செய்ய முடியாது என்று ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. முடிந்தால் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள் என்று சவால் விடுக்கிறேன். சர்வதேச பிணைமுறிகளில் இருந்து பெற்றுக்கெண்ட 12.5 பில்லியன் டொலர் கடன்களில் பெருமளவானவை மோசடி செய்யப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி தரப்பால் அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் | Harsga De Silva Challenges The Gov

எனவே, ஆட்சிக்கு வந்தவுடன் கடன்களை செலுத்த முடியாது என்று சர்வதேச பிணைமுறியாளர்களிடம் குறிப்பிடுவோம் என்று தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் குறிப்பிட்டது. நாட்டு மக்களிடம் உண்மையை சொல்லுங்கள். 75 ஆண்டுகால அரசியலில் நாட்டுக்கு ஏதும் நன்மை கிடைக்கவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவர்கள் குறிப்பிடுவதை போன்று ஏதும் நடக்கவில்லை என்றால். எந்த துறையிலும் நாடு முன்னேற்றமடைந்திருக்காது. அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது. ஏமாற்றமடைந்ததை மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து உறுதியளித்த ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து உறுதியளித்த ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, Canada

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US