ஹரி புரூக்கிற்கு இரண்டு ஆண்டுகள் தடை
இங்கிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஹரி புரூக்கை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 22 ஆம் திகதி தொடங்கவுள்ள ஐ.பி.எல்லில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக ஹரி புரூக் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இருப்பினும், போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த சீசனில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலம்
இருப்பினும், கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு தங்கள் பெயரைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒவ்வொரு வீரருக்கும் தெரிவிக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, புரூக்கிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த முடிவை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு (ECB) தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
