தீங்கு விளைவிக்கும் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
தீங்கு விளைவிக்கும் காற்றின் தரம், படிப்படியாக குறைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அதிகார மத்திய சுற்றுச்சூழல் சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் காற்றின் தரக் குறியீடு நேற்று(30) இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காற்றின் தரம்
கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 150ஐத் தாண்டியிருந்தாலும், நாட்டின் மத்திய பகுதியில் பல இடங்களில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு தற்போது 50க்கும் கீழே குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காற்றின் தரம் நேற்று, எந்த இடத்திலும் 150க்கு மேல் பதிவாகவில்லை என்றும், கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் வெப்பநிலை 100க்கு அருகில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், சுவாசப் பிரச்சினைகள் உள்ள உணர்திறன் மிக்க நபர்கள் ஏதேனும் அசௌகரியத்தை அனுபவித்தால் தகுந்த மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
