தொழிற்கல்வியில் மாணவர்களுக்கு ஏற்படும் பொருளாதார பிரச்சினை:பிரதமரின் விசேட அறிவிப்பு
நாட்டின் எந்தவொரு மாணவரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக தொழிற்கல்வி அல்லது வேறு எந்த கல்வி வாய்ப்பையும் இழக்காத வகையில் அரசாங்கத்தின் அனைத்து மூலோபாயத் திட்டங்களும் தயாரிக்கப்பட வேண்டும் என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறினார்.
தொழிற்கல்வித் துறையுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் பட்ஜெட் மற்றும் மூலோபாய திட்டமிடல் குறித்த பட்டறையில் உரையாற்றும் போது பிரதமர் இதை வலியுறுத்தினார்.
தொழில்கல்வியும் சிறந்த விழுமியங்களும்
தொழில்கல்வித் துறையுடன் இணைக்கப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்கள் உட்பட ஒன்பது நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள், அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்தப் பட்டறை நடைபெற்றது.
முக்கிய நிறுவனங்களின் மேம்பாட்டுத் திட்டங்களையும் அவற்றுடன் இணைக்கப்பட்ட பிற நிறுவனங்களின் திட்டங்களையும் தேசிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஏற்ப சீரமைப்பது அவசியம் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கல்வி நிறுவனங்கள் தொழில்முறை அறிவைக் கொண்டவர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், மனித நேயம், பக்கச்சார்பின்மை, மற்றவர்கள் மீதான கருணை மற்றும் ஒழுக்க விழுமியங்களை வளர்க்க சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தொழிற்கல்வியில் நுழைவதற்கும் அவர்களின் எதிர்காலத்தை வெல்வதற்கும் வழிகளை மேலும் விரிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.