இலங்கையின் வரலாற்றில் முதன்முறை! அநுர அரசை மகிழ்ச்சிப்படுத்திய புலம்பெயர் இலங்கையர்கள்
வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் 8.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவணியாக நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலர்கள்
இலங்கை வரலாற்றில் ஒரே ஆண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அதிகூடிய பணத்தொகை இதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற மொத்தத் தொகை 8.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 879 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதென ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025இல் இந்த வருமானம் 22.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து வரும் பணத்தில், டிட்வா சூறாவளிக்குப் பின்னர் பெறப்பட்டவை போன்ற பிற பணப் பரிமாற்றங்களும் அடங்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri