ஹரக் கட்டாவுக்கு உதவி புரிந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் வெளியான தகவல்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்ரமரத்ன மேற்கொண்ட தோல்வி முயற்சிக்கு உதவியதாகக் கூறப்படும், பொலிஸ் கான்ஸ்டபிள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.
இதன்படி, அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.09.2023) இரவு திருகோணமலை, சேருவிலவில் உள்ள தனது வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாம் பாதுகாப்பாக வேறொரு நாட்டில் இருப்பதாக கூறியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல்
தற்காலிக இடமாற்றம்
இதேவேளை பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் சந்தேகநபரின் நண்பியும் ‘ஹரக் கட்டா’ தொடர்பில் அறிந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில் 'ஹரக் கட்டா' காவலில் இருந்து தப்பிக்க முயன்று தோல்வியடைந்த நாளில் விசாரணை நடத்திய எட்டு குற்றப்புலனாய்வு அதிகாரிகள், தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam