வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் வீடு அல்லது வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கு காணி இல்லாமல் வாடகை அடிப்படையில் வாழும் குடும்பத்திற்கு நிரந்தர வீடு ஒன்றை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு மலிவு விலையில் வீட்டு திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு முற்கொடுப்பனவாக 500000 ரூபாய் செலுத்த கூடிய வசதி இருக்க வேண்டும்.
வீட்டின் பெறுமதிக்கமைய மேலதிக பணத்தை வருடத்திற்குள் தவணை முறையில் அறிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவசியமானவர்களுக்கு வங்கி மூலம் கடன் பணம் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான ரணபொகுணகம காணியில் 72 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri