யாழ்ப்பாணத்தில் கைத்துப்பாக்கி மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் - இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று(12.04.2026) குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைத்துப்பாக்கி மீட்பு
இதன்போதே அங்கிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்தக் கைத்துப்பாக்கி எதற்காக அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் பாரிய குற்றச்செயல்களைப் புரிவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா? அல்லது வேறு நபர்களிடமிருந்து கைமாற்றப்பட்டதா? என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி மேலதிக ஆய்வுக்காகப் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிலக்கரி தட்டுப்பாட்டு நட்டத்தை மக்கள் மீது சுமத்தவே முடியாது! பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு திட்டவட்டமான அறிவிப்பு