3ஆவது கட்டமாக பணையக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பினர் 3ஆவது கட்டமாக பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களில் 8 பேரை விடுவித்துள்ளது.
அமெரிக்கா, எகிப்து, கட்டார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட்டு, ட்ரம்ப் பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
6 வாரம் இந்த போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் எனவும், அத்துடன் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணையக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
3ஆவது கட்டம்
இதன் அடிப்படையில், முதற்கட்டமாக 3 பேரையும், 2ஆவது கட்டமாக 4 பேரையும் விடுதலை செய்தது.
The reunion we’ve been waiting for. pic.twitter.com/84oI7et5pn
— Israel Defense Forces (@IDF) January 30, 2025
இந்த நிலையில் இன்று 3ஆவது கட்டமாக பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களில் 8 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளது.
482 days ago, these Thai nationals were kidnapped by Hamas into Gaza. Today they are finally free. pic.twitter.com/FkXVATDRW6
— Israel Defense Forces (@IDF) January 30, 2025
இதில் 20 வயது ஆகம் பெர்கர் என்ற பெண் இராணுவ வீராங்கனை, அர்பெல் யெஹூத் , 80 வயது முதியவர், மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஐந்து பேர் என மொத்தம் 8 பேரை விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.
482 days they waited for this hug. pic.twitter.com/21X9fWrB9X
— Israel Defense Forces (@IDF) January 30, 2025
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan