வனவிலங்குகளுக்கு எதிரான முறைசாரா நடைமுறைகளை நிறுத்த கோரிக்கை
இலங்கை (Sri lanka) முழுவதும் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் முறைசாரா நடைமுறைகளை உடனடியாக நிறுத்துமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாறாக, சுற்றுச்சூழல் முகாமைத்துவத்துக்கு அறிவியல் அணுகுமுறையை பின்பற்றுமாறு, சுற்றுச்சூழல் நீதி மையம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வலியுறுத்தியுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள்
ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்றில், சுற்றுச்சூழல் நீதி மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிகழும் சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
யானை வேட்டை, யானைகள் மற்றும் பிற காட்டு விலங்குகளைப் பிடிப்பது உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டியதன் அவசரத்தை அவர் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இயற்கைச் சமநிலை சீர்குலைவு
நாடு முழுவதும் வனவிலங்குகளுக்கும் விவசாய சமூகங்களுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்கள் என்ற பிரச்சினைகள், ஒரே இரவில் நடக்கவில்லை, மாறாக இயற்கையின் சமநிலையை சீர்குலைக்கும் மனித நடவடிக்கைகளால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.

எனினும் பலர் யானைகளை விரட்டுவதும், வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் ஒப்புதல் இல்லாமல் அவற்றைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களையும் விலங்குகளையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்றும் சுற்றுச்சூழல் நீதி மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 12 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்