அழுத்தி கதைப்பதால் தீர்வு கிடைக்காது! கோடீஸ்வரன் எம்.பிக்கு ஹக்கீம் பதில்
கல்முனை பிரதேச செயலக விவகாரத்தினை பலாத்காரமாக நாடாளுமன்றத்தில் அழுத்தி கதைப்பதன் மூலம் மாத்திரம் தீர்த்துக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கல்முனை வடக்கு பிரதேச செயலகம்
“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர்களும் பலரும் இதுதொடர்பாக சபையிலும் சபைக்கு வெளியிலும் பல தடவைகள் கதைத்திருக்கின்றனர்.
இந்த பிரதேச செயலகம் விவகாரத்தில் 90களில் அமைச்சரவை அனுமதி கொடுக்கப்பட்டது. ஏன் இதுவரை செய்யப்படவில்லை.
35 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடாமல் அரசியல்வாதிகள் தலையீடு செய்கிறார்கள். அதனால் இது இடம்பெறுவதில்லை என்றெல்லாம் குறை கூறப்படுகிறது.
உண்மைக்கு புறம்பான இந்த விடயம் தொடர்பில் இதன் உண்மை தன்மை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தமிழ் அரசுக்கட்சியினரும் பல தடவைகள் எங்களுக்குள் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முயற்சித்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
