புனித ஹஜ் பெருநாள் திகதியை அறிவித்துள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசல்
புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று இலங்கையில் காணப்பட்டதனை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதனை தெரிவித்துள்ளது.
ஹஜ் பெருநாள்
நாட்டின் பல பிரதேசங்களிலும் துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமான தகவல் கிடைத்தமைக்கமைய, இன்று 29ஆம் திகதி துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாள் ஆரம்பிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் துல்ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளான எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்படும் என தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
அத்துடன் புனித அரபா தினம் துல் ஹஜ் 9ஆம் நாளான எதிர்வரும் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமையாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
