யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே பிரச்சினை: சம்பவ இடத்தில் தோட்டாக்கள் மீட்பு (video)
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை பெரும் களேபரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்று (13.03.2023) பதிவாகியுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் மயானம் ஒன்று புதிதாக அமைப்பதற்க்கு நாகர்கோவில் கிழக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை
நாகர்கோவிலில் மயானம் ஒன்றின் மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(14.03.2023) நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுடன் தொடர்புடைய புலம்பெயர்வாசி ஒருவர் மீது நேற்று முன்தினம் (12.03.2023) தாக்குதல் நடத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகர்கோவில் பகுதிக்கு நேற்று (13.03.2023) பொலிஸார் விசாரணைக்குச் சென்றுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம்
அங்கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களுடன் பொலிஸார் முரண்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முரண்பாடு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ள நிலையில் பொலிஸாரின் தாக்குதலில் பல பேர் காயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி தோட்டாக்கள் சம்பவ இடத்தில் இனங்காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: தீபன்
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri