கொழும்பில் பதற்றம்! குடு கண்ணாவின் கும்பலில் ஒருவர் பலி
கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் இன்று(10.02.2025) மாலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள இரண்டு குற்றக் கும்பல்களுக்கிடையில் நிலவி வந்த தகராறின் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் T - 56 ரக துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 43 வயதுடைய நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குறித்த நபர் குடு கண்ணா என அழைக்கப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின் சீடர் ஆவார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
