கண்டுக்கொள்ளப்படாத தென்னிலங்கை குற்றவாளிகள்! வடக்கை குறி வைக்கும் இராணுவம்
தற்போது நாட்டின் தெற்கு பகுதியில் அதிகளவு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறும் போது வடக்கில் எதற்கு இத்தனை இராணுவம் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,தெற்கிலே அதிகளவு துப்பாக்கிச் சூடு இடம்பெறுகின்றது.
ஆனால் வடக்கு- கிழக்கில் அந்தளவிற்கு எந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெறவில்லை. இருப்பினும் வடக்கில் எதற்காக இவ்வளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் வாழ்கின்றனர்.
அவர்களில் பலருக்கு நன்றாக துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் யாரும் வன்முறை மற்றும் ஆயுத கலாசாரத்தில் ஈடுபடவில்லை.''என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
