முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு (Mullaitivu) - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தில் சட்டவிரோத இடியன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளது.
கூழாமுறிப்பு கிராமத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தருக்கும் அவரின் குடும்ப சகோதரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கத்திக்குத்தும் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், குறித்த குடும்பஸ்தர் மீது வீட்டில் வைத்திருந்த இடியன் துப்பாக்கியால் மற்றையவர் சுட்டதில் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கி சூட்டினை நடத்தியவர் தப்பி சென்ற நிலையில் காயமடைந்த நபரிடம் இருந்து மாவட்ட மருத்துவமனை பொலிஸார் வாய்முறைப்பாட்டினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அதேவேளை, சம்பவம் குறித்து மேலதிக விசாரணகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri