சோதனைகளை மீறி ஹோட்டலுக்குள் துப்பாக்கி - ரகசிய சேவை பிரிவு தீவிர விசாரணை
வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் செயல்பட்ட விதம் ஒரு "பாதுகாப்பு வெற்றி" என்று ஓய்வுபெற்ற எப்.பி.ஐ (FBI) சிறப்பு முகவர் டேனியல் ப்ரூனர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த நிகழ்வைக் கையாண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரான கோல் தோமஸ் ஆலன், பாதுகாப்புப் படையினரால் சுடப்படாமல் உயிருடன் பிடிபட்டது ஒரு முக்கியமான அம்சம் என்றும் ப்ரூனர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அவர் பிரதான நடன அரங்கிற்கு (ballroom) அருகில் எங்கும் இல்லை என்றும், அவர் பிடிபடுவதற்கு முன்பு இன்னும் இரண்டு தளங்கள் கீழே செல்ல வேண்டியிருந்ததுடன் பல கதவுகள் பூட்டப்பட்டிருந்தன என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஹோட்டலுக்குள் வந்த துப்பாக்கி
அந்த நபர் மற்ற அதிகாரிகளால் மடக்கப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் எப்.பி.ஐ யின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக, சந்தேக நபர் ஹோட்டலில் தங்கியிருந்த அறையிலிருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் யாருடைய கண்ணிலும் படாமல் அந்தப் பகுதிக்கு எப்படி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த ஹோட்டலுக்கு எப்போதும் ஏராளமான மக்கள் வந்து செல்வதால், அங்கு வரும் ஒவ்வொருவரின் சூட்கேஸ்களையும் தனித்தனியாகச் சோதனை செய்வது சாத்தியமற்ற ஒன்று.
ஒருவேளை அந்த நபர் தனது துப்பாக்கிகளைப் பிரித்து பாகங்களாக மாற்றி ஒரு சூட்கேஸில் வைத்து எடுத்து வந்திருந்தால், அவர் ஹோட்டலுக்கு வரும் மற்ற சாதாரணப் பயணிகளைப் போலவே தெரிந்திருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
ஜெலென்ஸ்கியை வறுத்தெடுத்தது போல் நடக்கலாம்: சார்லஸ் மன்னர் - ட்ரம்ப் சந்திப்பில் எழுந்த அச்சம் News Lankasri