வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது கடும் தாக்குதல்
வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் மாணவன் ஒருவர் மீது இரும்பு பொல்லுகளால் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்ட நிலையில், படுகாயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம் (29.05.2023) மாலை குறித்த மாணவன் பள்ளிவாசலில் தொளுகையினை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மற்றொரு இளைஞர் குறித்த மாணவன் மீது இரும்பு மற்றும் பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
படுகாயமடைந்த மாணவன்
தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் சு. சுகைர் அகமட் என்ற 18 வயதான மாணவனே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam