கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்பு
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்து இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கைக்குண்டை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.