கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! அமெரிக்காவிலிருந்து விண்ணப்பிக்க முடியாது..
அமெரிக்க அரசு புதிய குடியேற்றக் கொள்கையை அறிவித்துள்ளது.
இதன் மூலம் தற்காலிக விசாவில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நபர்கள் “Green Card” பெற விண்ணப்பிக்கும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புதிய விதிப்படி, அமெரிக்காவிற்குள் இருந்தவாறே விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
முன்னதாக, மாணவர் விசா, சுற்றுலா விசா அல்லது வேலை விசாவில் அமெரிக்காவில் இருந்த பலர் “Adjustment of Status” (AOS) என்ற முறையின் மூலம் நாட்டை விட்டு வெளியேறாமல் Green Card-க்கு விண்ணப்பித்து வந்தனர்.
புதிய கொள்கை
இந்த நடைமுறை பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது, US Citizenship and Immigration Services (USCIS) வெளியிட்டுள்ள புதிய கொள்கை அறிவிப்பின் படி, “Adjustment of Status” என்பது இனிமேல் “அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே வழங்கப்படும் சிறப்பு நிவாரணம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, மிகவும் குறைந்த மற்றும் விசேட சூழ்நிலைகளில் மட்டுமே அமெரிக்காவில் இருந்தபடியே Green Card பெற அனுமதி வழங்கப்படும்.
இந்த புதிய விதி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், தற்காலிக வேலை விசா வைத்திருப்போர் உள்ளிட்ட அனைத்து non-immigrant visa வைத்திருப்போரையும் பாதிக்கும்.
மீண்டும் அதிகரித்துள்ள ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம்..! ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் அதிரடி உத்தரவு
அமெரிக்காவில் அனுமதி
USCIS வெளியிட்ட அறிக்கையில்,
“நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த குடியேற்றச் சட்டங்களுக்கும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் இணங்க, Green Card பெற விரும்பும் வெளிநாட்டு நபர்கள் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அமெரிக்க தூதரகங்கள் மூலம் consular processing முறையில் விண்ணப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
USCIS பேச்சாளர் Zach Kahler கூறுகையில், “இந்த புதிய கொள்கை குடியேற்றச் சட்டத்தின் ஆரம்ப நோக்கத்தை மீண்டும் கொண்டு வருகிறது.

தற்காலிகமாக அமெரிக்காவில் உள்ள ஒருவர் Green Card பெற விரும்பினால், அவர் தன் சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மிக அரிதான விசேட சூழ்நிலைகளில் மட்டுமே விதிவிலக்கு வழங்கப்படும்” என்றார்.
மேலும், இந்த நடைமுறை அமெரிக்காவில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கி விடுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதோடு, இந்த மாற்றம் மூலம் USCIS தனது வளங்களை மனிதக் கடத்தல் மற்றும் வன்முறை குற்றங்களின் பாதிப்புக்குள்ளானவர்களின் விசா விண்ணப்பங்கள், குடியுரிமை விண்ணப்பங்கள் போன்ற முக்கிய முன்னுரிமை பணிகளுக்கு திருப்ப முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.