கிராம உத்தியோகத்தர் பரீட்சை எழுதியவர்களுக்கான அறிவிப்பு
கிராம உத்தியோகத்தர் தெரிவிற்கான பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்கள் நேற்று(27.01.2024)வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
நேர்முகப் பரீட்சை
பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சை திணைக்களத்தினால் கிராம உத்தியோகத்தர் பதவிக்கான பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்றது.
அரச சேவை
இந்த பரீட்சை முடிவுகளின்படி 2002 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறவுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நேர்முகத் தேர்வுகள் விரைவில் நடத்தப்பட்டு, அவர்கள் அரச சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam