பாதுக்க- கலகெதர கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன!
பாதுக்க- கலகெதர கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார மருத்துவ அதிகாரி டமித்ர கஹன்கம இதனை தெரிவித்துள்ளார்.
பாதுக்க அருக்வத்த பிரதேசத்தில் ஒருவர் மரணமானதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
74 அகவையைக்கொண்ட ஒருவர் வீட்டில் மரணமானமையை அடுத்து அவிசாவளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவருடன் தொடர்புடைய 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளை பொறுத்து பிரதேசத்தை தனிமைப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.