தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் கிராம சேவகர்கள்
பெண் கிராம சேவையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக நாளை நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரவு நேரத்தில் ஏற்படுகின்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்களுடன் தொடர்புடைய கடமைகளிலிருந்து விலகுவதாக அறிவித்து , பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
முன்னாள் இராணுவ வீரரிடம் பெண் மருத்துவரின் மோசமான புகைப்படங்கள்: 72 மணித்தியாலங்களில் நடந்தது என்ன..!
பாதுகாப்பு
பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் உள்ள அலுவலகங்களை மூடுதல், ஒருவரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட இடத்திலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வது மற்றும் நண்பகல் 1 மணிவரை மட்டுமே அலுவலகத்தில் சேவையில் ஈடுபடுவது போன்ற நோக்கங்களை கொண்டு இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பாக தீர்வுகள் கிடைக்கும் வரை தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam