நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் (Photos)

Ministry of Education Grade 05 Scholarship examination
By Farook Sihan Jan 26, 2023 11:02 PM GMT
Farook Sihan

Farook Sihan

in சமூகம்
Report

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகியது. 

அதன் அடிப்படையில் பல மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். 

கல்முனை 

இம்முறை வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை அல் /மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 04 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.

அத்துடன்,142 புள்ளிகளை 2 மாணவர்களும் 141 புள்ளிகளை 2 மாணவர்களும் பெற்று வெட்டுப் புள்ளியை அண்மித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் (Photos) | Grade 05 Scholarship Examination 2022

மேலும் இப்பரீட்சைக்கு தோற்றிய 85 மாணவர்களில் 69 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

மேலும் இம்மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும்,பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் (Photos) | Grade 05 Scholarship Examination 2022

வாழைச்சேனை 

வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் இருந்து 17 மாணவர்கள் வெட்டுப் புள்ளியினைக் கடந்து சித்தியடைந்துள்ளனர்.

விண்ணப்பித்த 93 மாணவர்களில் 92 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததன் அடிப்படையில் 143 - 200 - 17 மாணவர்கள்

100 - 142 - 48 மாணவர்கள்

70 - 99 - 20 மாணவர்கள்

சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதுடன் மொத்த எண்ணிக்கையில் 6 மாணவர்களே 70 ற்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மாணவர்களின் சித்தி வீதம் அதிகரித்துள்ளதோடு 70 புள்ளிகளுக்கு குறைவான புள்ளிகள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சித்தியடைந்த மாணவர், முஹம்மது ஜெஸீர் மஸ்ஹர் பைஸி - 174 முஹம்மது அலியார் அம்னா சாரா - 171 முஹம்மது தௌபீல் முஹம்மது தஸ்கீன் - 158 முஹம்மது அமீம் பாத்திமா சுமா - 157 நூஃலெப்பை சுஜாத் அஹ்மத் - 155 அப்துல் ஜெலீல் ரீஸா மெஹ்சின்- 154 சுபைத் முஹம்மது ஆஷிக் - 152 முஹம்மது அன்சார் பிஸ்மி அஸீலா - 150 மஹ்மூத் நியாஸ் மஹ்தியா பானு - 150 புர்ஹானுதீன் அநிஷா அத்ன்- 149 ஆஷிக் இஸ்லாம் ஐமன் சதா - 148 ஜலால்தீன் முஸ்ரி ஹனீப் - 147 முஹம்மது பைரூஸ் சஹ்சார் அஹ்மத் -147 முஹம்மது இர்சாத் முஹம்மது அஸ்ஜத்-146 முஹம்மது ரஷ்மி சைத் அஹ்மத் -146 நௌசாத் அஹ்சன்- 143 ஹம்மாத் பாத்திமா பஹ்மிதா -143

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் (Photos) | Grade 05 Scholarship Examination 2022

வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஐந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்துள்ளார.

இதில், என்.சாரிக் அஹமட் 159, எஸ்.எப்.ஹில்மா 149, ஏ.எம்.சைமி சதா 148, எம்.எப்.எப்.ஹயா 147, எம்.ஐ.எப்.றிஸாப் 145 ஆகிய புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இவ்வாறு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களான ஏ.ருபாய்தீன், கௌசல்யா மற்றும் ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் எம்.பி.பாயிஸ் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் (Photos) | Grade 05 Scholarship Examination 2022

 ஓட்டமாவடி

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் தெரிவித்துள்ளார். 

பரீட்சை எழுதிய மாணவர்களில் 30 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கும், அயராது உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் வழிகாட்டல்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.அஜ்மீர், ஆரம்பப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஜாபிர் கரீம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட அனைவருக்கும் அதிபர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் (Photos) | Grade 05 Scholarship Examination 2022

கிளிநொச்சி

வெளியாகிய தரம் -05 புலமைப்பரிசில் பரிட்சையில் 263 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை விடக் கூடுதலான புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர் .

புலமைப் பரிசில் பரீட்சைக்கு கிளிநொச்சியில் தமிழ்மொழி மூலம் 2,212 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் 2,185 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இந்நிலையில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், பெறுபேறுகளுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளிகள் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தமிழ்மொழி மூல பரீட்சைக்கு 143 வெட்டுப் புள்ளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 263 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை விடக் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர். மேலும் 1853 மாணவர்கள் 70புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US