கரும்புகை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானம்
கரும்புகை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்துப் பொலிசார் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் ஒன்றிணைந்து சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
கரும்புகை வெளியிடும் வாகனங்கள்
அதன் போது கரும்புகை வெளியிடும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அதன் சாரதிகளின் அனுமதிப்பத்திரத்தைப் பொலிசாரும், வாகனத்தின் வருமான அனுமதிப் பத்திரத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளும் பொறுப்பேற்கவுள்ளனர்.

அதன் பின்னர் 14 நாட்களுக்குள்ளாக குறித்த வாகனம் கரும் புகை வெளியிடுவதற்கான காரணம் கண்டறியப்பட்டு , அதனை நிவர்த்தி செய்தாக வேண்டும்.
பின்னர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் வாகனம் ஓட்டிக் காண்பிக்கப்பட்டு கரும்புகை வௌியாகவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே அந்த வாகனத்தை தொடர்ந்தும் பயன்பாட்டில் வைத்திருக்க அனுமதி வழங்கப்படும்.
அவ்வாறில்லாத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் (Black List) இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த அதிகாரி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri