இலங்கையில் நாளாந்தம் புதுப்பிக்கப்படும் கோவிட் புள்ளிவிபரங்கள்
இலங்கையில் நாளாந்த கோவிட் தொற்றுக்களின் புள்ளிவிபரங்கள் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
களத்திலும், தனியார் மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட்ட விரைவான என்டிஜென் சோதனைகள் மூலம் அடையாளம் காணப்படும் தொற்றாளிகள் தொடர்பான தரவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதே இதற்கான காரணம் என்று, சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் இன்று தெரிவித்துள்ளார்.
தொற்றாளிகள் குறித்த தொற்றுநோயியல் பிரிவினால் பெறப்பட்ட தகவல்கள் நாளாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகின்றன.
நாளாந்த அடிப்படையில் புள்ளிவிபரங்கள் வெளியிடப்படுகின்றன.
சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு தகவல்களை பெறும்போது அந்தந்த புள்ளிவிவரங்களுடன் தொடர்புடைய தரவுகள் சேர்க்கப்படும் என்றும் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan