2500 பசு மாடுகள் இறக்குமதி செய்யப்படும்: அரசாங்கம்
அரசாங்கம் சுமார் 2500 பசு மாடுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
துரித கதியில் பசு மாடுகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கால்நடை வள இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் (D. B. Herath) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான்கு நிறுவனங்களினால் இவ்வாறு மாடுகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
இவ்வாறு பசு மாடுகளை வளர்ப்பதற்காக கண்டி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் நான்கு காணிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளன.
பசு மாடுகளை இறக்குமதி செய்வதற்கு குறித்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு பசு மாடுகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.



