மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கோவிட் தொற்று
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி விவேகானந்தபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சென்றவர் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அனைத்தொடர்ந்து வெல்லாவெளி பிரதேச பொதுச்சுகாதார வைத்தியருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் தொற்று ஏற்பட்டவரின் குடும்பத்துக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொன்ட போது தாய் மற்றும் பிள்ளைக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுரவணையடியூற்று விவேகானந்த புரம் பகுதியில் அக்குடும்பத்துடன் சேர்ந்ததாக இருந்த 06 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.