சம்மாந்துறையில் 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
அம்பாறை - சம்மாந்துறை பிரதேசத்தில் வர்த்தக நிலையங்களில் தொழில் புரிவோர், வியாபாரிகள் மற்றும் வீதிகளால் பிரயாணிப்பேரை வழிமறித்து எழுமாறாக இன்று அன்டிஜன் பரிசோதனை 80 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.
மிக வேகமாக பரவி வரும் கோவிட் 3 வது அலையை கிழக்கில் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதில் வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர், வியாபரிகள் மற்றும் சுகாதார நடைமுறையை பின்பற்றாது முகக்கவசம் அணியாது வீதியால் பிரயாணிப்போரை தடுத்து நிறுத்தி அவர்கள் உட்பட 80 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தொழில் நிமித்தம் சம்மாந்துறைக்கு வந்த உஹன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து அவர்களை சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,அவர்களுடன் நேரடி தொடர்புடைய அவர்களது குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.